மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 62,502 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சீராக உயர்ந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1% உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 62,502 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. ரிலையன்ஸ், சன் ஃபார்மா பங்குகள் 2.75%, எச்.சி.எல். டெக், இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 2% விலை உயர்ந்து வர்த்தகமானது. விப்ரோ பங்கு 1.8%, டெக் மகிந்திரா பங்கு 1.5%, அல்ட்ரா டெக் சிமென்ட், டாடா ஸ்டீல் பங்குகள் 1.4% விலை உயர்ந்தன.

டைட்டன், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் பங்குகள் 1%, இன்போசிஸ் பங்கு 0.98% விலை உயர்ந்து விற்பனையாயின. பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்.பி.ஐ., கோட்டக் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ், ஆக்சிஸ் வங்கி பங்குகளும் விலை உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 178 புள்ளிகள் உயர்ந்து 18,499 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுப் பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 62,502 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: