சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம் விலை கடந்த 60 நாளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ள காரணத்தால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சிறுக சிறுக சேமித்த பணத்தை பெருமளவில் தங்கத்தை நீண்ட கால முதலீடாக செய்வது வழக்கம்.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 30 காசுகள் சரிந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: