மேலும், சிகிச்சை பெற்றுவருபவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதுமட்டுமில்லாமல், இவ்வழக்குகள் தொடர்பாக சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்ட கோப்புகள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சித்தாமூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. மகேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர், 2 வழக்கையும் கொலை வழக்காக மாற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் 4 வழக்குகள் உள்ளூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு வர வேண்டியுள்ளது. இதனால் அந்த வழக்கு வந்ததும், போலீசார் அதையும் கொலை வழக்காக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
The post விஷ சாராயம் அருந்தி 8 பேர் பலியான விவகாரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை துவக்கம்: 2 கொலை வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.