அனுமதியில்லாத பார்களுக்கு சீல்

ஒட்டன்சத்திரம், மே 25: ஒட்டன்சத்திரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பார்களுக்கு

டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் நேற்று டாஸ்மார்க் மண்டல மேலாளர் கார்த்திகேயன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் நகர் பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பார்கள் உரிய அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பார்களை பூட்டி சீல் வைத்தனர். சோதனையின் போது கலால் வருவாய் ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட அலுவலர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

The post அனுமதியில்லாத பார்களுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: