அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்

விராலிமலை, மே 25: விராலிமலை அருகே அனுமதியின்றி சரளை மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.விராலிமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள், குளத்துப் பகுதிகளில் பொக்ளின் உள்ளிட்ட மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் சரளை மண், ஆற்று மணல் அள்ளப்பட்டு டிராக்டர், லாரி, டிப்பர் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கடத்தப்படுவதாக மாவட்ட கனிமவளத்துறை(புவியியல் மற்றும் சுரங்கம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொடர்ந்து கனிமவளத்துறை உதவி அலுவலர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் விராலிமலை-குளத்தூர் சாலை கலக்குடி அருகே உள்ள பெருமாபட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியில் 3 யூனிட் சரளை மண் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த வாகன உரிமையாளர் மணி மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: