கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் ஏழைகளுக்கு அறுசுவை உணவு

 

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூரில் மாநகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாநகர அவைத்தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம், மாநகர செயலாளரும் தஞ்சை மேயருமான சண்.ராமநாதன் முன்னிலை வகித்தனர்.

பெற்ற இக்கூட்டத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் , ஜூன் மாதம் முழுவதும் ஏழை எளியவர்களுக்கு, முதியோர் இல்லங்களில், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்குவது , ஜூன் 15ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்புவிழா நிகழ்ச்சியில், பெரும் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட திமுக அவைத் தலைவர் இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் , துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட திமுக பொருளாளர் அண்ணா, மாநகர திமுக நிர்வாகிகள், பகுதிகழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் ஏழைகளுக்கு அறுசுவை உணவு appeared first on Dinakaran.

Related Stories: