தஞ்சாவூர் கலெக்டர் தகவல் மர்மநபர்களுக்கு வலை திருவிடைமருதூர் சிவசூரிய பெருமான் கோயிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

 

திருவிடைமருதூர், மே 22: திருவிடைமருதூர் சிவசூரிய பெருமான் கோயிலில் வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆதித்ய ஹோமம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூல மந்திர ஹோமம், ஆதித்ய ஹோமம், ருத்ர யாகம், மகா அபிஷேகம் நடந்தது. கோள் தீர்த்த விநாயகர், சாயாதேவி உஷா தேவி சமேத சிவசூரிய பெருமான் மற்றும் 8 கிரகங்களின் சுவாமிக்கும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மூலவர் சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து புஷ்ப அலங்காரமும், உற்சவருக்கு தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு சோடச உபசார பூஜை, 7 அடுக்கு தீபாராதனை, பஞ்ச ஹாரத்தி மகா தீபாராதனை நடந்தது.

The post தஞ்சாவூர் கலெக்டர் தகவல் மர்மநபர்களுக்கு வலை திருவிடைமருதூர் சிவசூரிய பெருமான் கோயிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: