மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது

ஜெயங்கொண்டம், மே 19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.கீழவெளி காலனி தெருவை சேர்ந்த தங்கராசு மனைவி காளியம்மாள்(68). இவருக்கு சொந்தமான நிலத்தில் மா, தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று காளியம்மாள் சென்று பார்த்தபோது அதேஊரைச் சேர்ந்த முருகன் மகன் நடராஜன்(63) மரங்களில் உள்ள மாங்காய், தேங்காய் பறித்து கொண்டு இருந்துள்ளார். இதை கேட்ட காளியம்மாளை தகாத வார்த்தையால் திட்டி நடராஜன் தாக்கியுள்ளார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ மலரழகன் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: