இதுகுறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து கனிம வள உதவி இயக்குநர் வள்ளலை அந்த பணியில் இருந்து விடுவிப்பதாக கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக உதவி புவியியலாளர் சச்சின் ஆனந்த், கனிம வள உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
The post அரசு கூட்டங்களை புறக்கணித்த கனிம வள உதவி இயக்குநரை வீட்டிற்கு அனுப்பிய கலெக்டர்: இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.