இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் திரட்டி வருகின்றனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை போலீசார் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் 26ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘புகாருக்கான ஆவணங்களை திரட்டி வருகிறோம். இதில் புகார் தாரருக்கும் (மிலானி) குற்றம் சாட்டப்பட்டவருக்கும் (எடப்பாடி பழனிசாமி) சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்துவோம்,’’ என்றார்.
The post வேட்பு மனுவில் பொய் தகவல் தெரிவித்ததாக வழக்கு எடப்பாடிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.