தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் சாலையோரங்களில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரம் கணக்கில் பேருந்துகள் வந்து செல்கின்றனர். திருச்சி திருவாரூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சிவகங்கை மதுரை திருநெல்வேலி கோயமுத்தூர் தென்காசி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளது. ஆனால் அங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலை ஓரங்களிலேயே சிறுநீர் கழித்து செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதி மிகவும் அசுத்தமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை தாண்டி செல்லும் போது பயணிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக அந்த பகுதியில் சிறுநீர் கழிக்க கூடாது என அறிவிப்பு பலகை வைத்தும் அதையும் பொருட்படுத்தாமல் சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பதால் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் appeared first on Dinakaran.
