சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தூத்துக்குடி விக்டோரியா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தூத்துக்குடி, மே 14: தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் வெனிஷா ஹேரிஸ், அகஸ்டின் லிவார்டோ, மாணவர் அஸ்வத்போஸ் மற்றும் அன்டோனியா மிஸ்டிகா ஆகியோர் மொத்த மதிப்பெண்களில் அதிகமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் வெனிஷாஹேரிஸ் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று பள்ளி 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.100சதவீத தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவியர்களை தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர்பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், பள்ளிதலைவர் தமிழ்செல்வன், தாளாளர் இன்ஸ்டீன், முதல்வர் ஜெயசீலிகருணாகரி மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

The post சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தூத்துக்குடி விக்டோரியா பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: