தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்

மூணாறு, மே 13: மூணாறு அருகே தேவிகுளம் எஸ்டேட்டில் ஓடிக்கை டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி ராபர்ட்டுக்கு சொந்தமான 2 வயதுடைய கறவை பசு அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. இந்த பசு மூன்றாம் நம்பர் தேயிலை தோட்டத்தில் புலியின் தாக்குதலில் பாதி தின்றுவிட்ட நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அருகில் கிடைத்த கால் தடங்கள் வைத்து சோதனை செய்ததில் புலி என உறுதி செய்தனர்.அதுபோல் கடந்தாண்டு லாக்காடு எஸ்டேட் பகுதியில் இரண்டு பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடதக்கது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: