பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

தூத்துக்குடி, மே13: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது.
அதன்படி இந்த மாத சிறப்பு முகாம் இன்று(13ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் திருத்தம், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் மற்றும் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

The post பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: