நெல்லையில் இளம்பெண் மாயம்

நெல்லை, மே 12: மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்த முருகனின் மகள் சண்முககனி (18). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் அவரைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. வழக்குப் பதிந்த மேலப்பாளையம் போலீசார், மாயமான சண்முககனியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

The post நெல்லையில் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: