திருவாரூரிலிருந்து சேலத்திற்கு 1250 டன் ரேஷன் அரிசி

 

திருவாரூர்: திருவாரூரிலிருந்து சேலம் மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக ஆயிரத்து 250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் குறுவை பருவத்தில் 4 லட்சம் மெ.டன்னும், சம்பா பருவத்தில் தற்போது வரையில் 5 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரத்து 250 டன் அரிசி அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

The post திருவாரூரிலிருந்து சேலத்திற்கு 1250 டன் ரேஷன் அரிசி appeared first on Dinakaran.

Related Stories: