கல்லூரியில் ஆண்டு விழா

 

திருப்புத்தூர், மே 9: திருப்புத்தூர் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22ம் ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது. விழாவிற்கு, மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். இயக்குனர் ஜெய்சன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சென்னை சோஹோ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ராஜலட்சுமி சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கணிப்பொறியியல் துறை தலைவர் இளவரசி நன்றி கூறினார்.

The post கல்லூரியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: