மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

 

மதுரை, மே 8: மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நேற்று பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், விசிக மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான், எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்டத்தலைவர் பிலால்தீன், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலத்தலைவி பாத்திமாகனி மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டன்.
அவர்கள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இதனை மாநில மற்றும் ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஹார்தீன் நன்றி கூறினார்.

The post மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: