தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தேனி, மே 6: தேனி மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்ஐ ராஜா நேற்று மாலை தேனி நகர் பொம்மையக் கவுண்டன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே கஞ்சா தடுப்பு சம்பந்தமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பொம்மையகவுண்டன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் புவனேஸ்வரன் என்ற பூனை (23) என்பவரை நிறுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில், வாலிபரிடம் சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. விற்பனைக்காக அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு புவனேஸ்வரன் என்ற பூனையை கைது செய்தார்.

The post தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: