இதேபோல், வல்லூர் அனல் மின்நிலையத்தில் 3 அலகுகள் மூலமாக மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் அலகில் நேற்று காலை டர்பைன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் பழுது காரணமாக மொத்தம் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழுதுகளை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வடசென்னை, வல்லூர் அனல் மின்நிலையங்களில் 1,100 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.