வங்காரம்பேட்டை செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம், மே5: கும்பகோணம் அருகே வங்காரம்பேட்டை செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால்படுகையில் அமைந்துள்ளது அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம். இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post வங்காரம்பேட்டை செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: