அம்மன் கோயில் பூக்குழி திருவிழா

 

திருவாடானை, மே 3: திருவாடானை ஓரியூர் விலக்கு சாலையில் பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்.24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. கோயில் முன்பாக நடைபெற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கினர்.

The post அம்மன் கோயில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: