மதுரை: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் குறித்த அடிப்படை பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் முதன்மை பயிற்றுநர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் குறித்த அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் நிதி மற்றும் வங்கியியல் கூடுதல் பதிவாளரும், கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் நா.வில்வசேகரன், மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் இணைப்பதிவாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
The post வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி appeared first on Dinakaran.
