அடையகருங்குளத்தில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி ஆண்டு விழா

 

விகேபுரம்: விகேபுரம் அருகே அடைய கருங்குளத்தில் செயல்படும் அன்னை ஜோதி மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை டயானா அமலா ராணி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓஎன்ஜிசி ஆயில் கம்பெனி துணை பொது மேலாளர் துரைராஜ் மற்றும் அமலி மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியை ஜீவா தெரேசாள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.விழாவில் மாற்றுத்திறன் நிறைந்த மாணவ- மாணவிகள் நிகழ்த்திய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

The post அடையகருங்குளத்தில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: