சென்னை : சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் மீட்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.