ராஜபாளையம் அருகே கார் மோதி சிறுவன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

 

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் கார் மோதி சிறுவன் படுகாயமடைந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் மகன் மார்ட்டின்(13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை மார்ட்டின் சைக்கிளில் சென்றார். அப்போது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சைக்கிளில் மோதியது. இதில் சிறுவன் படுகாயமடைந்தான்.

காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த உறவினர்கள் அப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் காலை 9 மணி முதல் 10 மணி வரை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ப்ரீத்தி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக இப்பகுதியில் பேரிகார்டு மூலம் வேகத்தடை அமைக்கப்படும். மேலும் அப்பகுதியில் நிரந்தர வேகத்தடை அமைக்க ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ப்ரீத்தி உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்துக்குள்ளான சிறுவன் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post ராஜபாளையம் அருகே கார் மோதி சிறுவன் படுகாயம் உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: