ஆற்றில் மூழ்கி குழந்தை பலி

 

தேனி: தேனி நகர் சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(32). இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை நவநீத் ஆகியோருடன் சலவை செய்ய தேனி கூட்டாறுக்கு சசிகுமார் சென்றார். அங்கே நவ்நீத்தை ஒரு பாறையில் அமரவைத்து விட்டு இருவரும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் நவநீத் தவறி விழுந்து நீரில் முழ்கினான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சசிகுமார் மற்றும் அவரது மனைவி நவநீத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து சசிக்குமார் அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆற்றில் மூழ்கி குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: