இதேபோல், சிறுமுகை சாலை, தோலம்பாளையம் சாலை, காரமடை சாலை, அன்னூர் சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்கள் வீடுகளின் மீது சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் சில வீடுகள் சேதமாகின. துடியலூர் அம்பிகா நகரில் சூறாவளி காற்றுக்கு மின் கம்பிகள் உரசியதில் வெடி சத்தம் கேட்டது. இந்த அதிர்வால் டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் டேங்கிலிருந்து எண்ணை சிதறி தீ பிடித்தது. தகவலறிந்து சம்பவயிடம் வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து சிறுமுகை விவசாயி ஒருவர் கூறுகையில், `சூறாவளியுடன் பெய்த மழையால் இப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்றார்.
The post மேட்டுப்பாளையத்தில் சூறாவளியுடன் கனமழை: 70 ஆயிரம் வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.