காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

 

ஆறுமுகநேரி, ஏப்.22: காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. காயல்பட்டினம் அல்ஜாமீவுல் அஸ்ஹர் ஜூம்மா மஸ்ஜித் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலை காயல்பட்டினம் கடற்கரையில் நடந்தது. தொழுகையை இமாம் நைனா முஹம்மது நடத்தினார். அப்துல் மஜீது மஹ்ழரி ஆலிம் குத்பா பேருரையாற்றினார்.

தொழுகையில் அல்ஜாமிவுல் அஸ்ஹர் நிர்வாகத் தலைவர் அபுல்ஹசன் கலாமி, துணைத்தலைவர்கள் நவாஸ்அகமது, லெப்பை தம்பி, செயலாளர் துணி உமர், துணை செயலாளர் கரூர் செய்யது முகமது மற்றும் சமுதாய அரசியல் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

The post காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: