மின்சாரம் பாய்ந்து உப்பு பண்டல் தொழிலாளி பலி

 

தூத்துக்குடி, ஏப். 21: தூத்துக்குடி 3 சென்ட் அமுதா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் இசக்கி அர்ஜூன் (20). இவர், நேற்று முன்தினம் மாலை கீழ அரசடி பகுதியில் உள்ள உப்பு குடோனில் உப்பு பண்டல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உப்பு பண்டல்களை சாக்கு மூட்டைகளில் அடுக்கி மின்சார தையல் இயந்திரம் மூலம் தைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பலியானார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து உப்பு பண்டல் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: