தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகிய வெயில்!

சென்னை: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர்.

மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை கான முடிகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியது. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை நகர், கரூர் பரமத்தி, சேலம், திருச்சி, நாமக்கல், திருத்தணி, மதுரை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகிய வெயில்! appeared first on Dinakaran.

Related Stories: