போடியில் முதியவருக்கு இரும்பு கம்பி அடி

போடி, ஏப். 17: தேனி மாவட்டம், போடி அம்மாகுளம் மேலத்தெருவில் குடிப்பவர் ராஜா (60). இவர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சேவா சங்கத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், போடி கருப்பணன் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் குமாரசாமி என்பவர் நேற்று முன்தினம் ராஜாவை நேரில் சந்தித்து வரவு, செலவு கணக்குகளில் மோசடி செய்து வருகிறாயா எனக் கூறி, இரும்பு கம்பியால் ராஜாவை அவர் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராஜா புகாரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குமாரசாமியை தேடி வருகின்றனர்.

The post போடியில் முதியவருக்கு இரும்பு கம்பி அடி appeared first on Dinakaran.

Related Stories: