கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் இல்லம் முற்றுகை..!!

சென்னை: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் இல்லம் முற்றுகையிடப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள நிதிநிறுவன இயக்குனர் சந்திரசேகர் வீட்டை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர். கிரிப்டோ கரன்சியில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

The post கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் இல்லம் முற்றுகை..!! appeared first on Dinakaran.

Related Stories: