உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர்- காஞ்சிபுரம் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சட்ட விரோதமாக அதிக பாரம் ஏற்றிவந்த கனரக லாரிகள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது, உத்திரமேரூர் காவல் நிலைய காவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: