×

(வேலூர்) ரங்கநாதருக்கு திருமஞ்சனம் அலங்காரம் யுகாதி பண்டிகையையொட்டி

பள்ளிகொண்டா, மார்ச்.23: பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையொட்டி, காலை 10.30 மணிக்கு உற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளிய ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பால், இளநீர், சந்தனம் என திரவிய பொருட்களால் தீர்த்த அபிஷேகம் திருப்பாவையுடன் நடைபெற்றது. அதனைதொடர்ந்து மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய உற்சவர் ரங்கநாதர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Vellore ,Tirumanjanam ,Ranganatha ,Yugadi ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...