×

மேலப்பாளையத்தில் மது விற்றவர் கைது

நெல்லை, மார்ச் 23: மேலப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கிவைத்து அதிக விலைக்கு மது விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் (53) என்பவர் நெல்ைல தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே  சட்ட விரோதமாக மதுவை பதுக்கிவைத்ததுடன் அதிக விலைக்கு விற்று கொண்டிருந்தார். மேலும் இதுகுறித்து தெரியவந்ததும் விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர் மிரட்டினார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மது விலக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மாரியப்பனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Tags : Melapalayam ,
× RELATED நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே...