×

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயிலில் சிறுமிக்கு தாலிகட்டிய வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

விழுப்புரம்,  மார்ச் 22: திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயிலில் சிறுமிக்கு தாலிகட்டிய கணவன்  உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூரைச்  சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள். இவரின் படிப்பை பாதியிலேயே  நிறுத்திய பெற்றோர், கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி, கண்டமங்கலம்  அருகே உள்ள கணக்கன்பாளையத்தைச் சேர்ந்த  விஜயபாஸ்கர் என்பவர், மேலமங்கலத்தில் உள்ள அய்யனார்கோயிலில் சிறுமியின்  கழுத்தில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில மாதங்கள்  குடும்பம் நடத்தி வந்த நிலையில், இதுகுறித்த தகவல் தற்போது மாவட்ட  சமூக நலத்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாம். இதுகுறித்து நேரில் சென்று மாவட்ட  சமூகநலத்துறை அலுவலர் ராஜம்மாள் விசாரணை நடத்தினார். இதன்பிறகு அவர்  விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில்  குழந்தை திருமணம் சட்டத்தின்கீழ் விஜயபாஸ்கர் மற்றும் சிறுமியின் பெற்றோர்,  விஜயபாஸ்கரின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvennainallur ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்