×

கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர்கள் சேமிப்பு- பாதுகாப்பு திட்ட நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களான நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவை தொகை உள்ளன. இந்த தொகையினை பெற வரும் 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்களான சங்க நெசவாளர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஒளிநகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை மதுரை செனாய் நகரில் 29, கக்கன் தெருவில் உள்ள கைத்தறிதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கைத்தறி அலுவலர், கலைத்தல் அலுவலரிடம் நேரில் வந்து வழங்க வேண்டும். இதை தொடர்ந்து, அரசிடமிருந்து நிலுவை தொகையினை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட பயனாளிகளிடமிருந்து உரிய கோரிக்கை மனுக்கள் ஏதும் வராதபட்சத்தில் நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இதுதொடர்பாக மேலும் தகவல்கள் பெற கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 0452-2535669-க்கு தொடர்பு கொண்டு, தகவல் பெறலாம் என கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Dissolved Handloom Weavers Union ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ