×

முன்னீர்பள்ளத்தில் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


கேடிசி நகர், மார்ச் 21: நெல்ைலயை அடுத்த முன்னீர்பள்ளம் கிராமத்தில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் நிர்வாகியாக அதே ஊரில் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தர்மராஜ் (48) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இசக்கியம்மன் கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து பணம் திருடப்பட்டது. இதேபோல் ஆவரைகுளம் மற்றும் தருவையில் உள்ள அம்மன் கோயில்களிலும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது.

Tags : Munneerpallam ,
× RELATED கடையில் பொருட்கள் திருட்டு