×

மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி காட்பாடி அடுத்த திருமணியில்

கே.வி.குப்பம், மார்ச் 20: காட்பாடி அடுத்த திருமணியில் மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். கே.வி.குப்பம் அருகே காட்பாடி அடுத்த திருமணியை சேர்ந்த முருகனின் மகன் அரவிந்தன்(23), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நேற்று அவரது நண்பர்களான அருண், கோபி, கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து குருவி வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவரது நிலத்திற்கு சென்றபோது வனவிலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அரவிந்தன் தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அரவிந்தனை மீட்டு லத்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி போலீசார் அங்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விஏஓ ரேவதி அளித்த புகாரின்பேரில், லத்தேரி எஸ்ஐ குமரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags :
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...