×

மகனுக்கு ஜாமீன் பெறுவதற்காக கோர்ட்டுக்கு வந்த பெண் திடீர் உயிரிழப்பு

சேலம், மார்ச் 18: சேலம் நீதிமன்றத்திற்கு மகனுக்கு ஜாமீன் பெறுவதற்காக வந்த குண்டாஸ் கைதியின் தாய் திடீரென உயிரிழந்தார். சேலம் அன்னதானப்பட்டி மணியனூரைச் சேர்ந்தவர் பல்சர்குமார். ரவுடியான இவர், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் பல்சர்குமாருக்கு வழிப்பறி வழக்கில் ஜாமீன் கிடைத்தது. இதற்காக அவரது தாய் வள்ளி(56), சேலம் கோர்ட்டிற்கு நேற்று வந்தார். பகல் 1 மணி அளவில் திடீரென வள்ளிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்