×

ஓமலூர் அருகே விமான நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சேலம், மார்ச் 18: ஓமலூர் அருகே விமான நிலைய ஊழியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை ராஜமன்னார்காலனியை சேர்ந்தவர் மன்னார் மகன் லோகநாதன் (36). சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் கார்டன் சூப்பர்வைசராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் டெல்லியில் உள்ள மாமனார் வீட்டில் வளருகின்றனர். லோகநாதனும், சுதாவும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 15ம் தேதி காலை மனைவி சுதா வெளியே சென்றநிலையில், வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த அவரது தந்தை மன்னார் மற்றும் உறவினர்கள் சென்று லோகநாதனின் சடலத்தை மீட்டனர். பின்னர் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், லோகநாதனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Omalur ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!