×

வாகன உதிரிபாகம் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்செந்தூர், மார்ச் 18: திருச்செந்தூரில் ஒர்க்‌ஷாப்பில் வாகன உதிரிபாகம் திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் காளிராஜன்(47). இவர், திருச்செந்தூர் ராஜ் கண்ணாநகர் தெற்கு தெருவில் ஆட்டோ ஒர்க்‌ஷாப் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு, வேலை முடிந்ததும் வழக்கம்போல் ஒர்க்‌ஷாப்பை பூட்டி விட்டு காளிராஜன் வீடு திரும்பினார். மறுநாள் காலையில் சென்ற போது ஒர்க்‌ஷாப்பில் இருந்த வாகன உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹85 ஆயிரம் ஆகும்.

இதைத்தொடர்ந்து காளிராஜன், தனது ஒர்க்‌ஷாப்பில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, ஆட்டோவை பழுது நீக்க வந்த காயல்பட்டினம் மன்னராஜா கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மாதவராஜ் (37) என்பவர், ஒர்க்‌ஷாப்பில் இருந்த வாகன உதிரிபாகங்களை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காளிராஜன், திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி வசந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி மாதவராஜை கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...