×

கண்டமங்கலம் அருகே முதியவரிடம் ₹1.20 லட்சத்தை பறித்து சென்ற வாலிபர்கள் போலீசார் தீவிர விசாரணை

கண்டமங்கலம், மார்ச் 17:    கண்டமங்கலம் அருகே சோரப்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பலராமன் (எ) சேட்டு (65). திருமண புரோக்கர்.  கடந்த மாதம் 26ம் தேதி பலராமன் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சிமெண்ட் ஓடு வாங்குவதற்கு சோரப்பட்டில் இருந்து பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு ராதாபுரம் வழியாக வந்துள்ளார். ராதாபுரம் பகுதிக்கு வரும்போது மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகிலேயே அமர்ந்துவிட்டார். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம் பலராமன் தனக்கு மயக்கம் ஏற்பட்டு சோர்வாக உள்ளது, தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுமாறும் கேட்டுள்ளார். உடனே ஒருவர்  பலராமனின் பைக்கை எடுத்துக் கொண்டும், மற்றொருவர் பலராமனை இன்னொரு வாகனத்தில் பின்பக்கமாக அமர வைத்துகொண்டு திருக்கனூர் பகுதியை நோக்கி சென்றனர். திருக்கனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறு பலராமன் வாலிபர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பெட்ரோல் போட்டனர். அதற்கான பணம் பலராமன் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அப்போது பாக்கெட்டில் கத்தையாக பணம் இருப்பதை வாலிபர்கள் பார்த்துள்ளனர். பின்னர் பலராமனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சோரப்பட்டு நோக்கி சென்றனர். திருமங்கலம் சுடுகாட்டு பகுதிக்கு சென்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு, பலராமன் வைத்திருந்த ரூ.1.20 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பலராமன் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags : Kandamangalam ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை