விகேபுரம், மார்ச் 13: விகேபுரம் மேலக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழா நேற்று நடந்தது. விகேபுரம் மேலக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி விடைவாய்ப்பு வைபவத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு கோமரத்தாடிகள் வரிதாரர்களிடம் தர்மம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை பாபநாசத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராடி பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.