விகேபுரம் மேலக்கொட்டாரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழா

விகேபுரம், மார்ச் 13: விகேபுரம் மேலக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழா நேற்று நடந்தது. விகேபுரம் மேலக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி விடைவாய்ப்பு வைபவத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு கோமரத்தாடிகள் வரிதாரர்களிடம் தர்மம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை பாபநாசத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராடி பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜையும் அலங்காரமும் நடந்தது. இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வரிதாரர்களுக்கு இசக்கிசுப்பையா எம்எல்ஏ சார்பில் பனை ஓலையில் உண்பா பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை ஊர்தலைவர் ராஜா, துணைத்தலைவர்கள் செல்லப்பா, ராஜேஷ் கண்ணன், காரியதரிசி பத்திரி நாராயணன், உபக்காரியதரிசி மாதவன் என்ற சதீஷ், பொருளாளர் இசக்கியப்பன், துணை பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: