கள்ளக்குறிச்சி, மார்ச் 9: சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் செல்வி மனுத்தாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டது. வழக்கின் இறுதி அறிக்கை 2வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனிடையே, மாணவி மரண வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.