×

ஆட்டோ சவாரி பிரச்னையில் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி, மார்ச் 8: புதுவையில் ஆட்டோ சவாரி பிரச்னையில் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை திலாசுபேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (46). ஆட்டோ டிரைவரான இவர் சொந்தமான ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இல்லாததால் வழியில் செல்லும் கிடைக்கும் சவாரியை ஏற்றிச் செல்வார். கடந்த ஒரு மாதத்திற்குமுன்பு கோவிந்தசாலையைச் சேர்ந்த ஜெயசந்திரன், சோனாம்பாளையம் ஜோதிக்கும் அன்பழகனுடன் ரோட்டில் சவாரி ஏற்றுதல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு சமாதானம் பேசி முடிக்கப்பட்டதாம்.

 சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் காந்தி வீதியிலுள்ள ஒருஇருசக்கர வாகன வாடகை நிலையம் அருகே அன்பழகன் தனது ஆட்டோவில் சவாரிக்காக சென்றபோது முன்விரோதம் காரணமாக ஜெயச்சந்திரனும், ஜோதியும் எப்போதும் இங்குவந்து சவாரி ஏற்றுவதாக கூறி அசிங்கமாக திட்டியுள்ளனர். இதை அன்பழகன் தட்டிக் கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த 2 பேரும், அன்பழகனை சரமாரி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். காயமடைந்த அன்பழகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தல் அன்பழகன் அளித்த புகாரின்பேரில் ஆட்டோ டிரைவர்கள் ஜோதி, ஜெயச்சந்திரன் 2 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குபதிந்து இருவரிடமு்ம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை