நன்னிலம், செப்.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை சிதம்பரம் ஆரூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகன் முருகன் (24), இணையதளம் மூலம் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி சென்று வீடு திரும்ப வில்லை. மாலை நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் மகள் காணவில்லை பதறிய பெற்றோர்கள் பேரளம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.