நெல்லை, செப். 20: தச்சநல்லூரில் ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இரு ஆடுகளை மீட்டனர். தச்சநல்லூர் டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (38). இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆடுகள் வழக்கம்போல் கடந்த 17ம் தேதி மேய்ச்சலுக்கு வெளியே சென்றன. ஆனால், இதில் இரு ஆடுகள் பின்னர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் ஆடுகளை பற்றிய விவரம் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.