×

காலை சிற்றுண்டி பணி வழங்ககோரி விராலிமலையில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விராலிமலை, ஆக. 11: விராலிமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், இளஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் மல்லிகா சுந்தரி வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் சோலைமலையான் நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Sathunavu ,Viralimalai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...